தேசியச் செய்திகள்

மதுபோதைப் பாட்டியிடம் சிக்கிய 2 மாதப் பேரன்

மதுபோதையில் இருந்த பெண்ணிடம் இருந்து 2 மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

ENS

மதுபோதையில் இருந்த பெண்ணிடம் இருந்து 2 மாதக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்தில் மதுபோதையில் இருந்த பெண்ணிடம் 2 மாதக் குழந்தை இருப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அப்பகுதி போலீஸார் அந்த போதைப் பெண்ணிடம் இருந்து அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், அந்த 2 மாதக் குழந்தையின் பெற்றோர்கள் தினக்கூலிப் பணி செய்பவர்கள் என்றும் அந்த போதைப் பெண் அந்த குழந்தையின் பாட்டி என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

முதல்நாள் இரவு வேலை முடித்த பெற்றோர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த பாட்டி குழந்தையை தூக்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

சாம்பியன்ஸ் லீக்கில் எகிப்திய அரசன் முகமது சாலாவின் புதிய சாதனை!

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

சீனா மாஸ்டர்ஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

SCROLL FOR NEXT