அத்திவரதர் நிறைவு நாளான சனிக்கிழமை, அனந்தசரஸ் திருக்குளத்திற்கு பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், ஸ்ரீபாதம்தாங்கிகள் ஆகிய 100-க்கும் மேற்பட்டோர் பெருமாளை திருக்குளத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.
ஆன்மிகம்
தினமும் வண்ணப் பட்டாடையில் காட்சி தரும் அத்தி வரதர் - பகுதி III
காஞ்சிபுரத்தில் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. இங்கு அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். தற்போது வசந்த மண்டபத்தில் அத்தி வரதர் தரிசனம் அளித்து வரும் நிலையில், தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் என லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகை தருகிறார்கள்.
DIN
47-ஆவது நாளான வெள்ளிக்கிழமை வெந்தய நிறப் பட்டாடை, ரோஜா நிற அங்க வஸ்திரத்தில் காட்சியளித்த அத்திவரதர்.46-ஆவது நாளான வியாழக்கிழமை மலர்க் கவசம், மலர்க் கிரீடத்துடன் சிறப்பு அலங்காரத்தில் அத்திவரதர்.45-ஆவது நாளான புதன்கிழமை ரோஜா நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.