அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் அலையத்தில் நடைபெற்ற பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று வெள்ளி விமானத்தில் 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள் மாட வீதிகளில் வலம் வந்தனர்.
மயிலாப்பூரில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளினார். இந்த கண்கொள்ளா காட்சியை காண விடிய விடிய மாட வீதிகளில் அலைமோதிய கூட்டம்.மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வரும் 63 நாயன்மார்களின் வீதி உலாவை காண வந்த பக்தர்கள்.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.