தீவுத்திடலில் தொடங்கியது பட்டாசு விற்பனை - புகைப்படங்கள்
DIN
இன்னும் ஐந்து நாட்கள் இருப்பதால், தீபாவளி கொண்டாட்டத்துக்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.நிகழாண்டில் அதிகளவில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பசுமை பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குழந்தைகளை கவரும் வகையில் டிக்-டாக், மயில் தோகை வடிவிலான பல்வேறு பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மத்தாப்பு முதல் ராக்கெட் வரையிலான இரவில் பல வண்ணங்களைப் பொழியும் பட்டாசுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.குழந்தைகளைக் கவரும் வகையில் 10 வண்ணங்களில் ஒளிரும் புதிய ரக மத்தாப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மத்தாப்பு, பூச்சட்டி, கலர் பென்சில், தரைச்சக்கரம், சாட்டை, சரவெடி, புல்லட், ராக்கெட்டுகள், ஆட்டோபாம், குருவிவெடி, லட்சுமி வெடி, டபுள்சாட், டிரிபிள் சாட் உள்ளிட்டவையும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நரகாசுரா, சூப்பர்மேன், ஸ்கூபி-டூ போன்ற பழைய கார்ட்டூன் நட்சத்திரங்களின் பெயர்களிலும் பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மகிழ்ச்சியில் குழந்தை...பட்டாசு வாங்கி செல்லும் குடும்பத்தினர்.