நிதி நெருக்கடியில் யெஸ் வங்கி
வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியார் வங்கிகளில் 4வது பெரிய வங்கியான யெஸ் வங்கியின் நிர்வாகக் குழுவை, இந்திய ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. யெஸ் வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் எனவும், யெஸ் வங்கியின் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு ஊதிய உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
Advertisement