சாலையில் குவியும் குப்பை குவியல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ள நிலையில், குறிப்பாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சாலையில் குவியும் குப்பை மற்றும் பல்வேறு இடங்களில் தேங்கும் கழிவுநீரால் டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வரும் நிலையில், சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.