முகப்பு
செய்திகள்

அமர்நாத் பனிலிங்க யாத்திரை - புகைப்படங்கள்

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 141 கி.மீ. துாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 2,755 அடி உயரத்தில் அமைந்து உள்ள அமர்நாத் குகைக் கோவில். ஆண்டு தோறும் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதியில் இருந்து, ஆகஸ்ட் வரை இந்த பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 9:00 AM
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜுன் மாதம் 30-ஆம் தேதி துவங்கி, ஆகஸ்டு 11-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
பகிர்:
அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க வரும் திரளான பக்தர்கள்.
ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் மற்றும் பக்தர்கள் ஜம்முவுக்கு வரத் தொடங்கி உள்ளனர்.
அமர்நாத் குகை கோவிலுக்கு வரும் யாத்ரீகர்கள்.
கால்நடையாக பனிலிங்கத்தை தரிசிக்க வரும் யாத்ரீகர்கள்.
கரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரை நடைபெறவில்லை. இந்த ஆண்டு யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் யாத்ரீகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.
அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, மீண்டும் உரு பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.