செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி - புகைப்படங்கள்
DIN
தில்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டியது.நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் சுதந்திர நாள் விழா.செங்கோட்டையில் பிரதமா் மோடி கொடியை ஏற்றுவது இது 10-ஆவது முறையாகும்.நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி.அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் மோடியின் உரை முக்கியத்துவம் பெற்றது.கடந்த 10 ஆண்டுகாலத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து தனது உரையில் அவா் குறிப்பிட்டார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஹெலிகாப்டர் மூலம் தேசியக் கொடிக்கு மலர் தூவப்பட்டது.தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி அருகில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்.77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுதில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் கூடிய மக்கள்.தில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியின் 10-வது உரையை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.விழாவில் பிரதமர், மூத்த அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், நாட்டின் அடையாளமாக விளங்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.