முகப்பு
செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை - புகைப்படங்கள்

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Updated On : 14 ஜூன் 2024, 10:12 pm IST
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. - -
பகிர்:
பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை ஆடு வளர்ப்பவர்கள் போட்டா போட்டி போட்டுக்கொண்டு சந்தையில் விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
ஆடுகள் உடல் எடை மற்றும் ரகங்களுக்கு ஏற்றவாறு 5 ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டு வியாபாரம் நடைபெறுகிறது. - -
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் அதிகளவில் கொண்டுவரப்பட்டு வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. - -

Advertisement

Advertisement

பல பகுதிகளிலிருந்து வியாபாரிகள் ஆடுகளை கொள்முதல் செய்ய வாரச் சந்தைக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். - -
சென்னையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தையிலிருந்து வாங்கப்பட்ட ஆடுகளை ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் மூலம் எடுத்துச் செல்லும் வியாபாரி ஒருவர். - -
லக்னோவின் பழைய நகரப் பகுதியில், விற்பனைக்கு தயாரான உள்ள ஆடுகள். - Nand Kumar
அமோகமாக விற்பனையான ஆடுகள். - -
புளியம்பட்டி கால்நடை சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். - -
10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. - -
10 கிலோ கொண்ட ஆட்டுக் கிடாய் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. - -

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.