அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - புகைப்படங்கள்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்ட ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள்.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
கற்கள், கட்டைகளை கொண்டு இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்ட அதிமுகவினர்.
போர் களம்போல நிலவி வரும் அதிமுக தலைமை அலுவலகம்.
அடித்து நொறுக்கப்பட்ட பஸ் அருகில் நிற்கும் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டதால் அதிமுக தலைமை அலுவலக பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறையினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.