செய்திகள்

மூட்டு வலியா? இதோ ஒரு எளிய தீர்வு

முதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து  இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

கோவை பாலா


 முடக்கத்தான் கம்பு தோசை
 
தேவையான பொருட்கள்
 
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு
கம்பு - அரைக் கிலோ
வெந்தயம் - 25 கிராம்
கொத்தமல்லி - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
உப்பு -  தேவையான அளவு

செய்முறை : முதலில் கம்புடன் வெந்தயத்தை கலந்து  இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும். மாவுடன் நறுக்கிய வெங்காயம், முடக்கத்தான் கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து தோசை வார்த்து சாப்பிடவும்.

பயன்கள் : இந்த முடக்கத்தான் கம்பு தோசையை தினமும் ஒருவேளை உணவாக சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிகள் மற்றும் வாத வலிகளை நீக்கி உடலுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT