முகப்பு
செய்திகள்

தொப்பை குறைந்து உடல் இளமையாக உதவுகிறது இந்த ரசம்!

பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பையை குறைக்க உதவுகிறது கொள்ளு ரசம்

Updated On : 12 மார்ச் 2019, 10:52 am IST
பகிர்:

பெண்களுக்கு பிரசவத்திற்குப் பின்பு உண்டாகும் தொப்பையை குறைக்க உதவுகிறது கொள்ளு ரசம். இதை தயாரிக்க தேவையான பொருட்கள்:
 
கொள்ளு - 100 கிராம் 
மிளகு - 10 கிராம் 
பூண்டு - 10 பல் 
சீரகம் - அரை ஸ்பூன் 
இஞ்சி - 10 கிராம் 
மல்லி இலை - ஒரு கைப்பிடி 
உப்பு, மஞ்சள் - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் கொள்ளை சுத்தப்படுத்தி ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் புளியை சேர்த்து கரைத்து அதிலுள்ள  திப்பியை நீக்கிக் கொள்ளவும். மிளகு, பூண்டு, சீரகம், இஞ்சி, மிளகு, மல்லி இலை ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து எண்ணெய் விட்டு வதக்கி அதனுடன் கொள்ளு புளி கரைசலை சேர்த்து சூடு செய்யவும். நுரை வரும் சமயத்தில் இறக்கி வைத்து விட வேண்டும்.

பயன்கள் : இந்த ரசம் உடம்பில் உள்ள தேவையற்ற சதைகளை குறைக்கவும், பிரசவத்திற்கு பின்பு உண்டாகும் தொப்பையை கரைத்து எப்பொழுதும் இளமையாக இருக்க உதவும் ரசம் இந்த கொள்ளு ரசம். இதனை தினமும் உணவில் சேர்த்து அல்லது தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நாள் முழுவதும் குடித்து வந்தால் மேற்கூறிய பலனை பெறலாம். 

Advertisement

Advertisement

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments