செய்திகள்

ஆஸ்துமா பிரச்னையா? குணமாக்கும் கஷாயம் இது!

முதலில்  துளசி, சுக்கு , மிளகு , ஏலக்காய்,  மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கோவை பாலா

துளசி மல்லி கஷாயம்

தேவையான பொருட்கள்

பச்சைத் துளசி - 100 கிராம் 
சுக்கு - 20 கிராம் 
மிளகு - அரை ஸ்பூன்
ஏலக்காய் - 5 
தனியா (மல்லி விதை) - 20 கிராம் 
பனை வெல்லம் - தேவையான அளவு

செய்முறை : முதலில்  துளசி, சுக்கு, மிளகு, ஏலக்காய், மல்லி ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து  அருந்த வேண்டும்.

பயன்கள் : இந்த கஷாயத்தை குடித்து வந்தால் சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு ஆஸ்துமா மற்றம் நுரையீரல் சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபட்டு முழு ஆரோக்கியம் பெறலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT