உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (08.12.2016)ஏலக்காய்

ஏலக்காய், தனியா, நெருஞ்சில் - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

தினமணி

ஏலக்காய், தனியா, நெருஞ்சில் - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.

ஏலக்காய், சீரகம்  -50 கிராம் எடுத்து எலுமிச்சைச் சாற்றில் (100 மில்லி) ஊறவைத்து காயவைக்கவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தேனோடு கலந்து சாப்பிட்டால் தலைவலி , மயக்கம் குணமாகும்.

ஏலக்காய் , வெள்ளரி விதை - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து , காலை மாலை  இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் , நீர் அடைப்பு , கல் அடைப்பு அனைத்தும் குணமாகும்.

ஏலக்காய் போட்டுக் கொதிக்கவைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் , வாய் நாற்றம் , பல் அரணை , ஈறுகளில் ஏற்படும் புண் போன்றவை குணமாகும்.

ஏலரிசி , சுக்கு , கிராம்பு , சீரகம் - தலா 50 கிராம் எடுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவு எடுத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், குடல் புண் , வயிற்று வலி போன்றவை குணமாகும்.

ஏலக்காய் ,ஆவாரம் பூ , சுக்கு - தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சிக் குடித்தால் இதய நோய் , இதய பலவீனம் போன்றவை குணமாகும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT