முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை மஞ்சள்

மஞ்சளை நெருப்பில் சுட்டு முகர்ந்தால், தலைவலி, தலை பாரம், மூக்கடைப்பு போன்றவை

Updated On : 4 ஏப்ரல் 2017, 11:16 am IST
பகிர்:

மஞ்சளை நெருப்பில் சுட்டு முகர்ந்தால், தலைவலி, தலை பாரம், மூக்கடைப்பு போன்றவை தீரும்.

மஞ்சளுடன், கீழாநெல்லி இலையைச் சேர்த்து  அரைத்துச் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

சுத்தமான மஞ்சள் தூளை (அரை கிராம் )தயிரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகியவை தீரும்.

Advertisement

Advertisement

மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் வெள்ளைத்துணியை நனைத்துப் பிழிந்து கண்ணில் ஒற்றி வந்தால், சிவந்த கண்கள், கண் காந்தல், கண்களில் உண்டாகும் கட்டி, பார்வைக் கோளாறுகள் போன்ற அனைத்துக் கண் பிரச்சனைகளும் தீரும்.

மஞ்சள் தூள், விளக்கெண்ணெய், உப்பு  இவை மூன்றையும் ஒன்றாகக் குழைத்து முகத்தில் தடவினால் கண்ணுக்குக் கீழே ஏற்படும் கருவளையம் மறையும்.

மஞ்சள் தூளில் தேன் கலந்து முகத்தில் தடவிவந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

மஞ்சள் தூளை பாலேட்டில் குழைத்து முகத்தில் தடவிவந்தால் முகப்பருக்கள் மறையும்.

மஞ்சள் தூளை தேனில் குழைத்தச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.