உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்து 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்
மதுரை : உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சுற்றுவட்டாரங்களில் இன்று (மே 26) பகல் மழை பெய்தது. இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பருத்தி தோட்டம் ஒன்றில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் மழையில் நனையாமலிருக்க அங்கிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றுள்ளனராம். அப்போது, அந்த மரத்தில் மின்னல் பாய்ந்ததில், மரங்களின் அருகே நின்று கொண்டிருந்த கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.
மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement
சிகிச்சை பெறுபவர் வாசியம்மாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய மூவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Three daily wage laborers were killed after being struck by lightning near Usilampatti.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.