உசிலம்பட்டி: மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலி!
உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்து 3 பேர் பலி - ஒருவர் படுகாயம்
மதுரை : உசிலம்பட்டி அருகே மின்னல் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பருத்தி தோட்டத்தில் இருந்த மரங்களில் இன்று (மே 26) பகல் மின்னல் பாய்ந்தது. அதில், மரங்களின் அருகே நின்று கொண்டிருந்த கூலி வேலை செய்யும் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர்.
மின்னல் பாய்ந்ததில் கூலித் தொழிலாளிகள் 3 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Advertisement
Advertisement
summary