உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (24.01.2017) முருங்கை

தினமணி

முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து, அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் விக்கல், இரைப்பு, கீழ் வாயு, உள் உறுப்புகளில் வீக்கம், முதுகு வலி போன்றவை நீங்கும்.

முருங்கைப் பிசினை தேங்காய் எண்ணெய்யில் கரைத்து காதில் சில துளிகள் விட்டால் காதுப் புண் ஆறும்.

முருங்கைப் பட்டை, திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள கபம் இளகி வேளியேறும்.

முருங்கைப் பட்டைச் சாறு, குப்பைமேனிச் சாறு இரண்டையும் நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சித் தடவிக்கொண்டால் கரப்பான், சொரி ,சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

முருங்கைக் காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டு வந்தால் கருப்பை பலம் பெறும்.

முருங்கைக் காயை மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து வேக வைத்துச் சாப்பிட்டால் கபம், இருமல் விலகும்.

முருங்கைப் பிசினை(50 கிராம்), சட்டியில் போட்டு தண்ணீர் (1லிட்டர்) ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT