உணவே மருந்து

உறவு வேட்கையைத் தூண்டி எல்லையில்லா இன்பத்தை தரும் உணவு

முதலில் கீரையை சுத்தம் செய்து அரிந்து அதனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து பின்பு நன்றாக கடைந்து கொள்ளவும்.

கோவை பாலா


பசலைக் கீரைக் காரக் குழம்பு
 
தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - ஒரு கட்டு
பச்சை மொச்சைக் கொட்டை - 200 கிராம்
மிளகு -  மூன்று ஸ்பூன்
பூண்டு - 10 பல்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று 
சீரகம், மஞ்சள், உப்பு, புளி, எண்ணெய் - தேவையான அளவு   

செய்முறை : முதலில் கீரையை சுத்தம் செய்து அரிந்து அதனுடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து பின்பு நன்றாக கடைந்து கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதனுடன் வெங்காயம், தக்காளியை அரிந்துப் போட்டு வதக்கி அதனுடன் சீரகத்தைப் பொடி செய்து சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன் பூண்டையும் நறுக்கிப் போட்டு சேர்த்து வதக்கி பின்பு பச்சை மொச்சைக் கொட்டை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பிறகு புளியைக் கரைத்துச் சேர்க்கவும். மொச்சைக் கொட்டை நன்கு வெந்தப் பிறகு, அதனுடன் கீரையையும் சேர்த்து  நன்றாக கலக்கி இறுதியில் கடுகு, உளுந்தப் பருப்பு போட்டு தாளித்து இறக்கவும்.

பலன்கள் : இந்த பசலைக் கீரைக் காரக் குழம்பை உடல் வேட்கையில் திருப்தி இல்லாதவர்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உறவு வேட்கையில் எல்லையில்லா இன்பத்தை கொடுக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெப்பிலியில் ரூ.16 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

பிரணவ், அா்ஜுன் வெற்றி; குகேஷ், பிரக்ஞானந்தா ‘டிரா’

துறையூா், புத்தனாம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பெண்ணுக்கு வீட்டில் பிரசவம்: கிராம செவிலியா் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை

மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீா்க்க அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

SCROLL FOR NEXT