உணவே மருந்து

இடுப்பு பகுதிக்கு வலிமையை கொடுக்கவும், தாம்பத்தியத்தில் அதிக நாட்டத்தையும் உண்டாக்கும் ஆரோக்கிய பானம் இது!

முதலில் மிளகு, சீரகம் இரண்டையும் நெய்யில் வறுத்து அவற்றோடு கொஞ்சம் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.

கோவை பாலா

உளுந்தங் கஞ்சி

தேவையான பொருட்கள்

நொய்யரிசி - 200 கிராம்
உளுந்து - 50 கிராம்
மிளகு - 10 எண்ணிக்கை
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு

செய்முறை : முதலில் மிளகு, சீரகம் இரண்டையும் நெய்யில் வறுத்து அவற்றோடு கொஞ்சம் மஞ்சள் தூளைச் சேர்த்துக் கொள்ளவும்.

நொய்யரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும்.ஒரு கொதி வந்ததும் மிளகு, சீரகம், மஞ்சள் கலவையையும் அதனோடு சேர்த்துக் கொதிக்கவிட்டு பின்பு தேவையான அளவு உப்பு கஞ்சியாக்கி இறக்கவும்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உயிரணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். இடுப்பு பகுதிக்கு வலு கிடைக்கும். தாம்பத்தியத்தில் அதிக நாட்டத்தை உண்டாக்கும் அற்புதமான ஆரோக்கியமான கஞ்சி.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒளி நீ... ரம்யா பசுபுலேட்டி!

சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: குடியரசு துணைத் தலைவராகிறார்! 452 வாக்குகளுடன் வெற்றி!

மலர்களே மலரட்டும்... சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி!

குடியரசு துணைத் தலைவராகிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்! தேர்தலில் வெற்றி! செய்திகள்: சில வரிகளில் |9.9.25

கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்!

SCROLL FOR NEXT