உணவே மருந்து

மூளை சுறுசுறுப்பாக செயல்பட வேண்டுமா?

கோவை பாலா

பேரீச்சம் பழ ஜூஸ்
 
தேவையான பொருட்கள்

பேரீச்சம் பழம் - 10
உலர் திராட்சை - 7 எண்ணிக்கை
ஏலக்காய் பொடி -  5 கிராம்
தேன் - 3 தேக்கரண்டி

செய்முறை : முதலில் பேரீச்சம் பழம் மற்றும் உலர் திராட்சை இரண்டையும் கழுவி ஒரு கப் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு அரைத்து  ஜூஸாக்கி அதனுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் தேன் சேர்த்து கலக்கி குடிக்கவும்.

பயன்கள் : இந்த ஜூஸ் இரும்புச் சத்து மிகுதியாக கொண்ட அற்புதமான டானிக் ஆகும். இந்த ஜூஸை குடித்து வந்தால் உடல், நரம்புகள், இருதயம், மூளை ஆகியவை பலப்படும். கண் பார்வைக்கு உறுதுணையாக இருக்கும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT