வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் உணவு இது
முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
திணை அரிசி - 100 கிராம்
பூண்டு. - 10 பல்
மிளகு - 10
மல்லித் தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
- முதலில் திணை அரிசியை லேசாக வறுத்து உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
- முடக்கத்தான் கீரையை அலசி ஆய்ந்து அரைத்து சாற்றை வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.
- பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் திணை குருணையைச் சேர்த்து வேக வைக்கவும்.
- நன்கு வெந்து கஞ்சி பக்குவம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் முடக்கத்தான் சாற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.
- இந்தக் கஞ்சியை வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்க ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
- மேலும் சிறுநீரக குறைபாட்டினால் உண்டாகும் கால் வீககம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கஞ்சியை மருந்தாக ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com