உணவே மருந்து

முதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்

கோவை பாலா

தேவையான பொருட்கள்

காய்ந்த நாயுருவி இலை - 100 கிராம் 
கொண்டைக்கடலை - 250 கிராம் 
சோயா - 250 கிராம் 
சிறு பருப்பு - 100 கிராம்
மிளகு -  அரை ஸ்பூன்
ஏலக்காய் -  5 கிராம் 

செய்முறை : முதலில் நாயுருவி இலையை தவிர்த்து மற்ற அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து நாயுருவி இலையுடன் கலந்து அரைத்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு  வரவும்.

பயன்கள் : இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குணமாகும். மூல நோய்கள் விலகும். பற்கள் உறுதி பெற்று உடல் வனப்பை உண்டாக்கும் அற்புதமான ஊட்டச்சத்து மாவு.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT