முகப்பு
இளையோர் நலம்

குடி குடியைக் கெடுக்கும்: நைட் அடித்த சரக்கின் மப்பு இறங்காமல், காலையில் திணறும் நபர்களுக்கு..

உடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவு நீர் அருந்துவது நல்லது.

Updated On : 29 ஆகஸ்ட், 2019 at 4:27 PM
பகிர்:

உடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவுக்கு நீர் அருந்துவது நல்லது.

இன்றைய இளைஞர்களின் பெரும்பாலானோர் இந்தப் பிரச்னையால் அவதிப்படக் கூடும். இரவு மதுவிருந்தின் களைப்பு காலை வரை தொற்றிக் கொண்டு கடுமையான தலைவலி பாடாய்படுத்தும். இதை உடனே தவிர்க்க இந்தக் குறிப்புகள் உதவலாம்.

பானங்கள் அருந்தலாம் : இளநீர், மோர், ஸ்போர்ட்ஸ் டிரிங்ஸ் என இவற்றைக் குடிப்பதால் ஹேங்ஓவர் குறையும்.

இஞ்சி சாறு கொதிக்க வைத்த நீர் - அஜீரணம், தலைவலி, வாந்தி போன்ற சிக்கல்களை தவிர்க்க உதவும். அப்படியே இஞ்சியை மென்று விழுங்குவது கூடுதல் நல்லது

Advertisement

தேன் பானம் : தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் மந்தமான நிலை மாறி புத்துணர்ச்சி கிடைக்கும்.

காலை உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் நடப்பது நல்ல உணர்வைத் தரும்.

உடலில் நீர் வற்றுதல் காரணமாகவும் ஹேங்கோவர் வரும். அதற்கு போதுமான அளவு நீர் அருந்துவது நல்லது.

வைட்டமின் C நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை சாப்பிடுவது ஹேங்கோவரை நீக்கும்.

ஆல்கஹால் இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைப்பதாலும் ஆளையே தள்ளும். எனவே காலை அவ்வாறு உணர்ந்தால் ஸ்வீட், சர்க்கரை ஏதேனும் எடுத்துக்கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.