இந்தியா

இசைத்துறையின் உயரிய கெளரவம்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 கிராமி விருதுகள்

'கிராமி' விருதுகளில் இரண்டைப் பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்...

தினமணி

சென்னை,பிப்.1: இசைத்துறையில் உலக அளவில் மிக உயரியதாகக் கருதப்படும் "கிராமி' விருதுகளில் இரண்டைப் பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். "ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக அவருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இசைத்துறையில் அரிய சாதனைகளைச் செய்தவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள நேஷனல் அகாதெமி ஆப் ரெக்கார்டிங் ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்' அமைப்பு, 1958}ம் ஆண்டு முதல் "கிராமபோன்' விருதுகளை வழங்கி வருகிறது. இந்தப் பெயர் நாளடைவில் மருவி "கிராமி' எனப் பெயர் உருமாற்றம் பெற்றது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் திங்கள்கிழமை அதிகாலை 52}வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திரைப்பட இசைப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்த "ஸ்லம்டாக் மில்லியனர்' படம், இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் என இரண்டு பிரிவுகளிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கிராமி விருதுகளை வென்று சாதனை படைத்தார்.

பிரபல அமெரிக்கப் பாடகர் ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீனின் "த ரெஸ்ட்லர்...' பாடலை ஏ.ஆர்.ரஹ்மானின் "ஜெய் ஹோ...' பாடல் வென்றது குறிப்பிடத்தக்கது.

கிராமி விருதுப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்கள் உஸ்தாத் அம்ஜத் அலி கான், ஜாகீர் ஹுசைன் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் அவர்களுக்கு இந்த ஆண்டு விருது கிடைக்கவில்லை.

முதல் தமிழர்: கிராமி விருதுகளை வென்ற முதல் தமிழர் மற்றும் நான்காவது இந்தியர் என்ற பெருமையைப் பெறுகிறார் 44 வயதான ஏ.ஆர்.ரஹ்மான். இதற்கு முன்பு சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர் மூன்று முறையும் (1967, 1972, 2001), தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் ஹுசைன் (1992, 2009) இரண்டு முறையும் வீணை இசைக் கலைஞர் விஸ்வ மோகன் பட் ஒரு முறையும் (1994) கிராமி விருதுகளை வென்றுள்ளனர்.

"ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக கடந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட சர்வதேச விருதுகளை வென்றுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இப்போது அவர் இசையமைத்து வரும் "கப்பிள்ஸ் ரிட்ரீட்' ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றுள்ள "நா நா ...' என்ற பாடல் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT