ஊழல் குற்றச்சாட்டு பேரில் சி.பி.ஐ.யால் விசாரணை செய்யப்பட்ட தில்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசினார்.
வடக்கு தில்லியில் உள்ள முதல்வர் கேஜரிவால் வீட்டில் ராஜேந்திர குமார் நேற்று இரவு சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருடன் ஆம் ஆத்மியின் வழக்கறிஞர் ஹெச்.எஸ். பூல்காவுடன் இருந்ததாக தெரிகிறது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை தானே சந்தித்து கொள்வதாகவும், முதல்வர் கேஜரிவால் தன்னை பாதுகாக்க தேவையில்லை என்று ராஜேந்திர குமார், அரவிந்த் கேஜரிவாலிடம் கூறியதாக தெரிகிறது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
ராஜேந்திர குமார் மீதான சி.பி.ஐ வழக்கு என்பது அரசியல் நோக்கிலானது. அவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என வழக்கறிஞர் பூல்கா கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.