தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தில்லி கிரிக்கெட் முறைகேடு குறித்து தில்லி அரசாங்கம் அமைத்த குழு, பெரிய அளவில் நிதி முறைகேடுகள் நடைபெற்றதாக கூறியுள்ளது. அப்போது (அதாவது 1999 முதல் 2013 வரை) தில்லி கிரிக்கெட் சங்க தலைவராக பதவி வகித்த அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும். அவர் அமைச்சராக தொடர்ந்தால் நேர்மையான விசாரணை நடத்த முடியாது என கூறியுள்ளது.
தில்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் ஆகியோர் அருண் ஜேட்லி பதவி விலக வேண்டும். இல்லையேல் பிரதமர் மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.