இந்தியா

அமெரிக்க வாழ் இந்தியருக்கு முக்கிய பதவி அளித்து கௌரவித்த ஒபமா

ஆள்கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக் வாழ் இந்தியருக்கு முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா.

PTI

ஆள்கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அமெரிக் வாழ் இந்தியருக்கு முக்கியமான பதவியை வழங்கி கௌரவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபமா.

குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த ஹெரால்ட் டிசௌஷா கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சின்சினாட்டி குழந்தைகள் மருத்துவமனையில் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

முன்னதாக டிசௌஷா வேலைக்காக கடத்தப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்து வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் வழக்கறிஞராகவும், ஊக்கமளிக்கும் பேச்சாளராரகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் டிசௌஷா, அமெரிக்காவின் ஆள்கடத்தல் குறித்து ஆலோசனை வழங்கும் அமைப்பின் உறுப்பினராக நியமித்து அதிபர் ஒபமா உத்தரவிட்டுள்ளார்.

அந்த உத்தரவில், இதுபோன்ற திறமை வாய்ந்த தனிநபர்கள் அமெரிக்க அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வந்திருப்பதை வரவேற்கிறேன். தங்களது அனுபவம் மூலம் இந்த வேலையை அவர்கள் சிறப்பாக செய்வார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT