முகப்பு
இந்தியா

ஆண்டு இறுதி கொண்டாட்டம்: சென்னையை விரும்பும் இந்தியர்கள்

ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்காக சென்னை நகரையே அதிக இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

Updated On : 20 டிசம்பர், 2015 at 3:19 PM
பகிர்:

ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்காக சென்னை நகரையே அதிக இந்தியர்கள் விரும்புவது தெரியவந்துள்ளது.

ஹோட்டல்ஸ்.காம் (Hotels.com) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஆண்டு இறுதி கொண்டாட்டங்களுக்கான தேடலில் சென்னை நகர் முதலிடம் பிடித்துள்ளது. 137 சதம் பேர் சென்னை நகர் குறித்த விவரங்களை தேடியுள்ளனர்.

கோவாவில் உள்ள கோல்வா கடற்கரை 132 சத தேடல்களுடன் இரண்டாம் இடத்தையும், கார்டன்சிட்டி என அழைக்கப்படும் பெங்களூரூ நகரம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

Advertisement

டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கொண்டாட்டங்களுக்காக ஹோட்டல்ஸ்.காம் இணையதளத்தில் ஜனவரி முதல் நவம்பர் வரை தேடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளைப் பொருத்தவரையில் தாய்லாந்து நகரின் கோ சாமுய் தீவு 92 சத தேடல்களுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

ஹாங்காங் நகரம் 72 சத தேடல்களுடன் இரண்டாம் இடத்தையும், மலேசியாவின் தலைநகர் கோலா லாம்பூர் 62 சத தேடல்களுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.