கடும் பனிமூட்டம்: மொராதாபாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.3-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தாங்க முடியாத அளவிற்கு கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால் மொராதாபாத் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனி காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அங்கு நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement