போக்ரானில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் கைது
ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் போக்ரான் பகுதியில் உளவு பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
ராஜஸ்தான் மற்றும் உத்ர பிரதேச மாநிலங்களின் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின் போது முன்னாள் ராணுவ வீரர் பட்வாரி கோர்தன் சிங் கைது செய்யப்பட்டார்.
போக்ரான் நகரில் தான் கடந்த 1974 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் அணு ஆயுத சோதனை நடைபெற்றது.
Advertisement
அதிகாரபூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பட்வாரியிடமிருந்து பல ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.