ஜம்முவில் துப்பாக்கிச்சூடு: லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள குஸ்ஸு கிராமத்தின் எல்லை பகுதியில், ராணுவத்தினருடன் போலீசார் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தீவிரவாதிகளில் ஒருவர் மன்சூன்பாத்தை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
Advertisement
அப்பகுதியில் வேறு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனரா எனவும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.