பயிற்சியின் போது பாராசூட் விரியாததால் வீரர் பலி
சரஸ்வா விமானப் படை நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற விமானப் படை பயிற்சி வீரர்கள், விமானத்தில் இருந்து குதித்த போது, ஒரு வீரரின் பாராசூட் விரியாததால், அவர் தரையில் விழுந்து பலியானார்.
சரஸ்வா விமானப் படை நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக சென்ற விமானப் படை பயிற்சி வீரர்கள், விமானத்தில் இருந்து குதித்த போது, ஒரு வீரரின் பாராசூட் விரியாததால், அவர் தரையில் விழுந்து பலியானார்.
கர்மா ஸ்விங் என்ற வீரர், பயிற்சியின் போது விமானத்தில் இருந்து குதித்த போது, அவரது பாராசூட் விரியாமல் போனதால், அவர் தரையில் விழுந்து பலியானதாக காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஜக்தீஷ் ஷர்மா கூறியுள்ளார்.
இது குறித்து சரஸ்வா விமானப் படை நிலையத்தின் அதிகாரிகள் காவல்நிலையத்துக்கு தகவல் அளித்ததாகவும், பலியான வீரரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகம் ஷர்மா கூறினார்.
Advertisement