காஷ்மீரில் நிலநடுக்கம்: பங்கருக்குள் இருந்த 2 ராணுவ வீரர்கள் காயம்
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்குமிடங்களான
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்குமிடங்களான பங்கர் சேதமடைந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பங்கரில் இரண்டு ராணுவ வீரர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது, நிலநடுக்கம் காரணமாக பங்கர் சேதமடைந்ததில் இருவரும் காயமடைந்தனர்.
உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Advertisement
நிலநடுக்கம் காரணமாக ஸ்ரீநகரின் முக்கியப் பகுதியான ஜெஹாங்கிர் சௌக்கில் உள்ள மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.