முகப்பு
இந்தியா

மோடி, அமித் ஷாவை காட்டுமிராண்டி, பைத்தியம் என்று கூறிய லாலு மீது வழக்குகள்

பிகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து மோசமாகப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Updated On : 31 அக்டோபர், 2015 at 4:17 PM
பகிர்:

பிகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து மோசமாகப் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பாஜக தலைவர் அமித் ஷாவை காட்டு மிராண்டி என்றும், பைத்தியம் என்றும் கூறி லாலு மீது பிகார் மாநிலம் சச்சிவாலயா காவல்நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதே போல, கண்டி காவல்நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடியை காட்டுமிராண்டி என்று கூறியதற்காக லாலு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.