இந்தியா

வழக்கத்துக்கு மாறாக அஸ்ஸாமில் ஆர்வத்தோடு வாக்களிக்கும் மக்கள்: 2 மணி வரை 51% வாக்குப்பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தின் 65 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், பிற்பகல் 2 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

PTI

அஸ்ஸாம் மாநிலத்தின் 65 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவில், பிற்பகல் 2 மணி வரை 51% வாக்குகள் பதிவாகியுள்ளது.

65 தொகுதிகளுக்கு இன்று நடைபெறும் வாக்குப்பதிவு 539 வேட்பாளர்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போகிறது.

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 95,11,732 வாக்காளர்களில் முதல்வர் தருண் கோகோய் உட்பட சரிபாதி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்திவிட்டனர்.

பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 2,190 வாக்குச்சாவடிகளில் 50.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வழக்கத்துக்கு மாறாக காலை முதலே வாக்குச்சாவடிகளில் அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுவதும், பல ஊர்கள் திருவிழாக் கோலம் பூண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம்! இபிஎஸ் விளக்கம்

SCROLL FOR NEXT