மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம், மகாத் பகுதியில் மும்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் மாயமானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கடும் மழை காரணமாக இன்று அதிகாலை 1 மணி அளவில் சாவித்ரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் முப்பை-கோவா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மேல் சென்றுகொண்டிருந்த இரண்டு அரசு பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அதில் பயணம் செய்த 22 பேரின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.