இந்தியா

காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்துக்கு மத்திய அரசு உதவும்: பிரதமர் மோடி

காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது அமைதி தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

IANS

அலிராஜ்பூர்: காஷ்மீர் மாநிலத்திற்கு தற்போது அமைதி தேவைப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், வளர்ச்சிக்கும் எது தேவையோ அதற்கு மெஹபூபா தலைமையில் செயல்படும் அரசு உரியத் தீர்வை கொண்டு வரும்.

கடந்த மாதம் 8-ம் தேதி ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றதால் அங்கு வன்முறை வெடித்து வருகின்றது. பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏற்பட்ட தொடர் மோதலில் 55 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காஷ்மீரில் மக்கள் சிலர் தவறாக வழிநடத்தி வருகின்றனர். இதனால் கடந்த 32 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு தற்போது அமைதி தேவைப்படுகின்றது. மேலும் காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு நம் அனைவரும் உதவிட வேண்டும். மக்களின் வாழ்வாதார நன்மைக்கு எது தேவையோ அதற்கு மத்திய அரசு உதவும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT