அசாம், காஷ்மீரில் பாதுகாப்பு குறித்து ராஜ்நாத் ஆய்வு
வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.
புது தில்லி
வன்முறை பாதித்த காஷ்மீர் மாநிலத்திலும், தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான அசாம் மாநிலத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு நடத்தினார்.
புது தில்லியில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜீவ் மேஹ்ரிஷி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இரு மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் வன்முறையைத் தவிர்த்து, பாதுகாப்புப் படை மற்றும் பொதுமக்கள் தரப்பில் உயிர்சேதம் இல்லாமல் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.