செயல் திறன் அற்ற பிரதமரால் இந்தியாவுக்கு பாதிப்பு: ராகுல் காட்டம்!
பிரதமர் மோடியின் செயல் திறன் அற்ற தன்மையினால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
புதுதில்லி: பிரதமர் மோடியின் செயல் திறன் அற்ற தன்மையினால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தில்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற சபைக்கு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராகுல் கூறியதாவது:
பிரதமர் மோடியின் செயல் அற்ற தன்மையினாலும், தற்பெருமை பேசும் தன்மையினாலும் இந்தியா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவர் போன்ற தன்னுடைய பிம்பம் குறித்த கவலைகளின் ஊடாக சிக்கி கொண்ட ஒரு பிரதமரை காங்கிரஸ் அளித்ததில்லை. மேலும் காஷ்மீர் விவகாரத்தை இந்த அரசு கையாளும் முறையும் திருப்தி அளிக்கவில்லை.
இவ்வாறு ராகுல் பேசினார்.