தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சிறையில் இருந்து வெளியே வந்தார் இந்திராணி முகர்ஜி
ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்திராணி முகர்ஜியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க இந்திராணிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
எனினும், அவர் செய்தியாளர்களிடமோ, வெளி நபர்களிடமோ பேச நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
Advertisement
இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் கடந்த 2015ம் ஆண்டு இந்திராணி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.