முகப்பு
இந்தியா

9-வது இந்தியா-இலங்கை கூட்டுக் கூட்டம்: இலங்கை செல்கிறார் சுஷ்மா

ஒன்பதாவது இந்தியா இலங்கை கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை செல்கிறார்.

Updated On : 4 பிப்ரவரி, 2016 at 5:44 PM
பகிர்:

ஒன்பதாவது இந்தியா இலங்கை கூட்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை செல்கிறார்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை நடைபெறும் 9-வது இலங்கை- இந்தியா கூட்டுக் கூட்டத்துக்கு சுஷ்மாவும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்களா சமரவீராவும் தலைமை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் பொருளாதாரம், வர்த்தகம், மின்சக்தி மற்றும் ஆற்றல், தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாச்சார மற்றும் கல்வி விஷயங்கள், அறிவியல் தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான ஒருங்கிணைப்பு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

Advertisement

இரு நாட்டுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடைசியாக 2013 ஆம் ஆண்டில் புது தில்லியில் இக்கூட்டம் நடைபெற்றது.

இலங்கை பயணத்தின் போது மத்திய அமைச்சர் சுஷ்மா, அதிபர் சிறீசேனா, பிரதமர் விக்ரமசிங்க மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து அமைச்சர் இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விவாதிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.