குஜராத்: ஆற்றில் பஸ் கவிழ்ந்து 20 பேர் சாவு
குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் இறந்தனர்.
நவ்சாரி மாவட்டத்தின் சுபா கிராமம் அருகே பூர்ணா நதியின் மேல கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து எதிர்பாரதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
இதுவரை 20 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எம்.எஸ்.பாரதா கூறினார்.
நவ்சாரியிலிருந்து உகாய் செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Advertisement
பேருந்தில் எவ்வளவு பேர் பயணம் செய்தனர் என்ற விவரம் தெரியவில்லை. உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.