பிரதமர் என்றால் அரசை வழிநடத்த வேண்டும்; சாக்கு சொல்லக் கூடாது: ராகுல்
பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
பிரதமர் என்ற பதவியில் இருப்பவர் மத்திய அரசை வழி நடத்த வேண்டுமே தவிர, சாக்குபோக்கு சொல்லக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
அசாமில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் ஒரு குடும்பம் முடக்கி வருகிறது என்று காந்தி குடும்பம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதையும் செயல்படுத்த முடியாமல் சாக்குபோக்கு சொல்லி வருகிறார்.
Advertisement
மிகப்பெரிய தொழிலதிபர்கள் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் செயலற்ற தன்மை குறித்து எங்களிடம் கவலை தெரிவித்துள்ளனர் என்று ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.