இந்தியா

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை: பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

PTI

புது தில்லி: இந்தியாவில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சராக பதவி உயர்வு பெற்றார். இவருக்கு ஸ்மிருதி இராணி வகித்து வந்த மனித வள மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டது. ஸ்மிருதி இராணிக்கு ஜவுளித் துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கே அதிக முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து மாநிலங்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று கூறினார்.

கல்வித் துறையில் முக்கியக் கொள்கைகள் பற்றி தற்போது எதுவும் கூறுவதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT