முகப்பு
இந்தியா

காஷ்மீரில் தொடர் பதற்றம்: 3-வது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்றாவது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 11 ஜூலை, 2016 at 12:45 PM
பகிர்:

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மூன்றாவது நாளாக அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முகாஜிதீன் தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதால் காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு அடிவாரத்தில் உள்ள பால்டால் மற்றும் பஹல்காம் ஆகிய முகாம்களில் இருந்து செல்லும் அமர்நாத் புனித யாத்திரையை 3-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், விரைவில் யாத்திரையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.