இந்தியா

பூட்டிய காருக்குள் மூச்சுத் திணறி பலியான சிறுவர்கள்

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார்க் கதவுகள் பூட்டிக் கொண்டதில், இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் ஜெய்ப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

PTI

ஜெய்ப்பூர்:  காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார்க் கதவுகள் பூட்டிக் கொண்டதில், இரண்டு சிறுவர்கள் மூச்சுத் திணறி பலியான சம்பவம் ஜெய்ப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

புகியா கிராமத்தில், கிரண் பவ்ரா (8), விநோத் பவ்ரா (4) சிறுவர்கள், பக்கத்து வீட்டில் இருந்த காருக்குள் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார் கதவு பூட்டிக் கொண்டதில் மூச்சுத் திணறி இரண்டு சிறுவர்களும் பலியாகினர்.

வெகு நேரம் கழித்து, காரின் உரிமையாளர் காருக்குள் சிறுவர்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் அப்பகுதியே பெரும் சோகத்தில் மூழ்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT