மும்பை: மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுநர் ஷியாம்வர் ரவி, சாட்சியமாக மாற அனுமதி அளித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு பொது மன்னிப்பு வழங்குவதாகவும் அறிவித்தது.
ஷீனா போரா கொலை வழக்கில் சாட்சியாக மாறுவதற்கும், தனக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் ஷியாம்வர் ரவி தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ தரப்பு ஏற்கனவே அனுமதி அளித்தது.
இந்நிலையில், ஷியாம்ரவி சாட்சியமாக மாறுவதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.மகாஜன் அனுமதி அளித்தார். மேலும், ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார். அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.