ரயில்வே துறையின் இணையதளத்தை 'ஹேக்' செய்த அல்-கொய்தா
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.
இந்திய ரயில்வே துறைக்குச் சொந்தமான ரயில்நெட் இணையதளத்தை அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் நேற்று `ஹேக்' செய்தனர்.
இந்திய ரயில்வேயின் மத்திய மண்டலம் சார்பில் நிர்வாக மேலாண்மைக்காக ரயில்வே துறைகளுக்கு இடையேயான தகவல்களை பறிமாரி கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்துக்குள் புகுந்த அல்-கொய்தா தீவிரவாதிகள், அதை சிறிது நேரம் முடக்கினர். அவர்கள் `உங்கள் பெருங்கடலில் ஏன் ஒரு புயலும் இல்லை? மௌலானா அஸீம் உமரிடமிருந்து இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு செய்தி' என்ற வாசகத்தை அவர்கள் பதிவேற்றம் செய்தனர். மேலும், 11 பக்கங்கள் கொண்ட ஒர் அறிக்கையையும் இணைத்திருந்தனர்.
Advertisement
உத்ர பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அஸீம் உமர் அல்-கொய்தா அமைப்பின் இந்திய துணைக் கண்டத்தின் தலைவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார்.