முகப்பு
இந்தியா

ஸ்ரீநகர் - பாரமுல்லா நெடுஞ்சாலையில் கண்ணிவெடி கண்டுபிடிப்பு: மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Updated On : 11 மார்ச், 2016 at 12:43 PM
பகிர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் - பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த பயங்கர சக்தி வாய்ந்த கண்ணிவெடியை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்க வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில், சாலையோரப் பகுதிகளை ஆய்வு செய்த ராணுவ வீரர்கள், ஸ்ரீநகரின் நௌகாம் என்ற பகுதியில் சாலையோரம் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைக் கண்டுபிடித்தனர். அதனை செயலிழக்க வைக்கும் பணியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் ஈடுபட்டனர்.

இப்பகுதி சாலை ராணுவ வீரர்களால் அதிகமாகப் பயன்படுத்தும் சாலை என்பதால், ராணுவத்தை குறி வைத்தே இந்த கண்ணிவெடி புதைக்கப்பட்டிருப்பதாகவும், வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.