முகப்பு
இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் 4 நாட்களுக்கு பின் மீண்டும் வாகனங்கள் இயக்கம்

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

Updated On : 21 மார்ச், 2016 at 2:39 PM
பகிர்:

ஜம்மு காஷ்மீரின் தேசிய நெடுஞ்சாலை நான்கு நாட்களுக்கு பின் தற்போது சரிசெய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக கடும் பனி மற்றும் நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தடைசெய்யப்பட்டிருந்தது. தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து சாலைகளில் வழக்கம் போல் இன்று வாகனங்கள் இயக்கப்படுகின்றது. ஆனால் ஒரு வழி பாதை மட்டும் இயக்க அனுமதி வழங்கியுள்ளதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக மூத்த போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

ராம்பான் மாவட்டத்தில் இடைவிடாது மழை பெய்து வருவதாலும், அடிக்கடி நிலச்சரி ஏற்பட்டு வருவதாலும் 300 கி.மீ நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. தற்போது, அங்கு ஒருவழி பாதை மட்டும் இயக்கப்பட்டு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு நாட்களுக்கு பின்னர் காய், கறிகள் அனைத்தும் கடைகளுக்கு சப்ளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.